search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலத்த பாதுகாப்பு"

    • இருவரும் இருசக்கர வாகனத்தில் சாத்துக்குடல் கீழ்ப்பாதியில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
    • இருவரையும் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முற்பட்ட போது பாலமுருகன், சிவாவையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே சாத்துக்கூடல் கீழ்பாதியில் காணும் பொங்கலை முன்னிட்டு அக்கிராமத்தில் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருள் வாங்குவதற்காக பட்டியல் இனத்தைச் சேர்ந்த சிவசங்கர்,ஹரி கிருஷ்ணன், ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சாத்துக்குடல் கீழ்ப்பாதியில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.  அப்பொழுது ஆலிச்சி க்குடி கிராமத்தில் அருகே சென்று கொண்டிருந்த பொழுது, அங்கு கூடியிருந்த இளைஞர்கள் வாகனத்தில் இந்த சாலையில் செல்லக்கூடாது என வழிமறித்து தகராறு செய்துள்ளனர்.

    அவர்களிடம் வாக்கு வாதம் செய்த சிவசங்கர், ஹரி கிருஷ்ணன் இருவரும் அங்கிருந்து விருத்தாச்சலம் சென்று பரிசு பொருட்களை வாங்கி விட்டு அதே வழியில் மீண்டும் சென்றபோது, 20- க்கும் மேற்பட்ட இஇருவரும் இருசக்கர வாகனத்தில் சாத்துக்குடல் கீழ்ப்பாதியில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்    தகவல் அறிந்து அங்கு வந்த சாத்துக்கூடல் கீழ்பாதி கிராமத்தைச் சார்ந்த பாலமுருகன், சிவா அவர்கள் இருவரையும் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முற்பட்ட போது பாலமுருகன், சிவாவையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த நான்கு பேரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டனர  இந்த  சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்  இரு தரப்பினரிடயே ஏற்பட்ட மோதலின் காரணமாக சாத்துக்கூடல் பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

    • தெற்கு காஷ்மீரின் நான்கு மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பு.
    • பயங்கரவாதிகளை எதிர்கொள்ள பாதுகாப்பு படை வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி.

    ஸ்ரீநகர்:

    இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, தெற்கு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் கோவிலில் பனிலிங்கத்தை தரிசனம் செய்யும் புனித யாத்திரை இன்று தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11ந் தேதிவரை நடைபெறுகிறது.

    முன்னதாக இந்த யாத்திரையில் பங்கேற்கும் முதல் குழுவின் பயணத்தை நேற்று ஜம்முவில் உள்ள பகவதி நகர் முகாமில் இருந்து கவர்னர் சின்கா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில், 43 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை நிகழ்ச்சியில் அசாம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பக்தர்கள் செல்லும் பாதையில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    குறிப்பாக தெற்கு காஷ்மீரின் குல்காம், சோபியான், புல்வாமா மற்றும் அனந்த்நாக் ஆகிய நான்கு மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படை வீரர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    மேலும் ட்ரோன் மூலம் கண்காணிப்பு மற்றும் ரேடியோ அதிர்வெண் அடையாளம் காணும் முறைகளும் பின்பற்றப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பாதுகாப்பு படைகளின் தேடுதல் வேட்டை மற்றும் தாக்குதல் அணுகுமுறை காரணமாக ஜூன் மாதத்தில் மட்டும் ஜம்மு காஷ்மீரில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    ×